Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி விமான நிலையத்தில் அட்டை பெட்டியில் தங்க காசுகள் – பரபரப்பு

திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் கோலாலம்பூரில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணிகளிடம் சோதனை நடத்தினர். பயணிகள் ஒவ்வொருவராக சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்பொழுது இரண்டு பயணிகளும் பார்சலுக்கு பயன்படுத்தப்படும் அட்டை பெட்டிகளில் குறித்த தகவல்கள் சந்தேகம் இருந்தது அட்டைப் பெட்டிகளை சுங்கத்துறை அதிகாரிகள் பிரித்து கிழித்து எடுத்தனர்.

அந்த அட்டை பெட்டியில் 30 தங்க நாணயங்கள் இருந்ததை கண்டுபிடித்தனர். 1199 கிராம் எடையுள்ள தங்க காசுகளின் மதிப்பு 75 லட்சம் 71 ஆயிரம் என சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு பயணிகளை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து தங்க காசுகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *