ஷார்ஜாவிலிருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் மூலம் திருச்சிராப்பள்ளி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணிகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது சந்தேகத்திற்கிடமான வகையில் நடந்து கொண்ட ஒரு ஆண் பயணியை அதிகாரிகள் தனியாக அழைத்து சென்று சோதனை செய்தனர். அதில் அந்த பயணி தனது ஜீன்ஸ் பேண்டின் பின்பக்கம் முட்டிக்கு கீழ் பகுதியில் தங்கத்தை ஸ்ப்ரே செய்து கடத்தி எடுத்து வந்தது தெரிய வந்தது.
இதனையடுத்து சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பயணியை கைது செய்து அவரிடமிருந்து ரூபாய் 24 லட்சத்து 96 ஆயிரம் மதிப்புள்ள 390 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments