இயேசு கிறிஸ்து கல்வாரி மலையில் சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூருவதாக புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. பாவிகளுக்காக தன்னை சிலுவையில் மரணத்துக்கு ஒப்பு கொடுத்த இயேசு கிறிஸ்துவின் பாடுகளை உலகம் முழுவதும் கிறிஸ்தவ மக்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகிறார்கள். இதில் புனித வெள்ளியையொட்டி கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று நீண்டநேரம் சிறப்பு திருப்பலி மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
இந்தநாளில் கிறிஸ்தவர்கள் நோன்பிருந்து வெள்ளாடை அணிந்து சிலுவைப் பாதையில் பங்கெடுப்பது வழக்கமாகும். இதன் ஒரு பகுதியாக திருச்சி பாலக்கரை எடத்தெரு பகுதியில் உள்ள உலகமீட்பர் பசிலிக்காவில் நற்கருணை வழிபாடு மற்றும் சிலுவைப்பாதை நடந்தது. பிறகு சிலுவையில் அறையப்பட்ட இயேசு சொரூபத்தை ஊர்வலமாக எடுத்து வந்து தூம்பா பவனி என்னும் இயேசுவின் இறுதி ஊர்வலம் நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
இதேபோல் சுப்பிரமணியபுரம் பகுதியில் உள்ள புனித ஜான் பிரிட்டோ தேவாலயம், புத்தூர் பாத்திமா ஆலயம், மேலப்புதூர் மரியன்னை ஆலயம், லூர்து அன்னை தேவாலயம். செயின்ட் ஜான் தேவாலயம் உள்பட பல்வேறு ஆலயங்களில் புனிதவெள்ளியையொட்டி சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் பண்டிகையை யொட்டி தேவாலயங்களில் இன்று (சனிக்கிழமை) நள்ளிரவு இயேசு உயிர்த்தெழும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments