Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அரசு அச்சக ஊழியர் தூக்கிட்டு தற்கொலை

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள கோகுல் நகர் 6வது தெருவை சேர்ந்தவர் விஜயரங்கன் (57) என்பவர் சென்னை மிஸ்ட்டில் உள்ள அரசு அச்சகத்தில் வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு சர்க்கரை நோய் உள்ளதால் இன்சுலின் உபயோகப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சர்க்கரை நோய் காரணமாக பார்வை குறைபாடு ஏற்பட்டது அதனை தொடர்ந்து மருத்துவரிடம் பரிசோதனை செய்தபோது 40 சதவீத பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் மன உளைச்சல் அடைந்த விஜயரங்கன், நேற்று இரவுவழக்கம்போல் தூங்க சென்றவர் காலையில் பார்க்கும் போது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த விஜயரங்கன் மனைவி ஈஸ்வரி(44) திருவெறும்பூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விஜயரங்கன் உடலை கைப்பற்றிய பிரேத பறிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *