திருச்சி உறையூர் ஸ்ரீ விக்னேஷ் பப்ளிக் பள்ளியில், மழலையர் பட்டமளிப்பு விழா (27.03.24) அன்று நடைபெற்றது. விக்னேஷ் கல்விக் குழும அறங்காவலர் சகுந்தலா தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக காவேரி மருத்துவமனை குழந்தைகள் நல மருத்துவர் மேகநாதன் பங்கேற்று பேசுகையில் குழந்தை பராமரிப்பு பற்றியும் குழந்தைகளின் உணவுமுறைப் பற்றியும் எடுத்துரைத்தார்.
பள்ளியின் தாளாளர் கோபிநாதன், பள்ளி அறங்காவலர் லட்சுமி பிரபா, இயக்குனர் வரதராஜன், ஆலோசகர் மலர்விழி, முதல்வர் கிருத்திகா, பட்டம் பெற்ற மாணவர்களை வாழ்த்தினர். இதனை தொடர்ந்து 50 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் அளிக்கப்பட்டது. இறுதியாக மாணவர்களின் கலை நிகழ்ச்சியுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments