Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் (01.03.2024) அன்று மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம்

தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மாநகராட்சி மூன்றாவது வார்டு உறுப்பினர் செல்வி மணி மற்றும் வினோத் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.

(01.03.2024) அன்று ஸ்ரீரங்கம் வடக்கு தேவி, தேவி நடுநிலைப்பள்ளியில் காலை 10:00 மணி முதல் மதியம் 01:00 மணி வரை இந்த சிறப்பு முகாம் நடக்க உள்ளது. இந்த முகாமினை திமுக ஸ்ரீரங்கம் பகுதி செயலாளர் ராம்குமார் துவக்கி வைக்கிறார். இதில் அரவிந்த் கண் மருத்துவமனையின் முன்னாள் கண் மருத்துவர்கள் வருகை தந்து பொதுமக்களுக்கு ஆலோசனைகள் மற்றும் சிகிச்சை அளிக்க உள்ளனர்.

மேலும் உயர்தர லேசர் கண் புரை அறுவை சிகிச்சை, ஊசி, தையல், பேண்டேஜ் போடாமல் கண் சம்பந்தப்பட்ட அனைத்து வியாதிகளுக்கும் இலவசமாக பரிசோதனை செய்யப்படும். குறிப்பாக குழந்தைகளுக்கான கண் பரிசோதனை உண்டு கண்ணாடியகம், மருந்தகம், ஆய்வக வசதியும் இம்முகாமில் உள்ளது.

இம்முமுகாமில் கலந்து கொள்பவர்களுக்கு சலுகை முறையில் அறுவை சிகிச்சை செய்யப்படும். மேலும் விபரங்களுக்கு 0431-2741742, 9952243444 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *