Site Logo mobile
Search Icon
Mobile Gif
Articles

பெரும் அதிர்ச்சி ! பிஎஃப் வட்டியை குறைக்க அரசு முடிவு எடுக்க இருக்கிறதா?

நாட்டில் கோடிக்கணக்கான மக்கள் தனியார் மற்றும் அரசில் வேலை செய்கிறார்கள், அவர்களுக்கு PF (Provident Fund) ஒரு பெரிய ஆதரவு. ஏனெனில் PFல் அதிக வட்டி கிடைக்கும், மேலும் அதில் முதலீடு செய்யும் தொகைக்கு வருமான வரியில் இருந்து விலக்கு உள்ளது. தற்போது PF கணக்கு வைத்திருப்பவர்கள் பெரும் அதிர்ச்சி அடையக்கூடும் என்ற செய்தி வந்துள்ளது. பிஎஃப் மீதான வட்டி வரும் நாட்களில் குறையலாம். இது நடந்தால் 6.5 கோடிக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

ஆர்டிஐயை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டுள்ள செய்தியில், பிஎஃப் மீதான வட்டியை குறைக்க அரசு முடிவெடுக்கலாம் என்று தகவல்கள் கசிகின்றன. ஏனெனில் 2021-22 நிதியாண்டில், உபரியை மதிப்பிட்ட பிறகும் EPFO ​​நஷ்டத்தைச் சந்தித்தது. உண்மையில், 2021-22ம் ஆண்டில், EPFO ​​ரூபாய் 449.34 கோடி உபரியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டது, மாறாக ரூபாய் 197.72 கோடி பற்றாக்குறை இருந்தது. அதன்பிறகு, பிஎஃப் மீதான வட்டி விகிதத்தை மறுபரிசீலனை செய்ய முடிவு செய்யப்பட்டது. எனினும், இந்த செய்தி இன்னும் அரசால் உறுதிப்படுத்தப்படவில்லை.

இது தொடர்பாக அரசு மற்றுமொரு முடிவை எடுத்துள்ளது. EPFO துறையானது தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் வருகிறது இப்போது EPFO ​​நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் இல்லாமல் PF மீதான வட்டி விகிதங்கள் குறித்து எந்த அறிவிப்பையும் வெளியிடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையில், இப்போது வரை, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் (இபிஎஃப்ஓ) மத்திய அறங்காவலர் குழு (சிபிடி) நிதி அமைச்சகத்தின் ஒப்புதலுக்கு முன் வட்டி விகிதங்கள் பற்றிய தகவல்களை வழங்கும். இதற்கு அரசின் க்ரீன் சிக்னல் கிடைத்த பிறகே மக்கள் பிஎஃப் வட்டி தொடர்பான தகவல்களைப் பெற முடியும்.

தற்பொழுது PF மீதான உத்தேச வட்டி விகிதம் EPFO ​ன் ஒப்புதலுக்காக நிதி அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். அமைச்சகத்தின் ஒப்புதலுக்குப் பிறகு புள்ளிவிவரங்கள் வெளியிடப்படும். வல்லுநர்கள் இந்த முடிவை வட்டி விகிதக் குறைப்புடன் இணைத்து முடிவை எடுப்பார்கள். தற்போது அனைத்து சிறுசேமிப்புத் திட்டங்களிலும் PF-ன் வட்டிதான் அதிகமாக உள்ளது. 8.20 சதவிகித வருடாந்திர வட்டி கொண்ட மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் மட்டுமே அதிக வட்டிக்கு வழிவகை உள்ளது.

அதேசமயம் சுகன்யா சம்ரித்தி யோஜனா உள்ளிட்ட அனைத்து சிறிய திட்டங்களின் வட்டி விகிதங்கள் PF ஐ விட மிகக் குறைவு. இந்த காரணத்திற்காக, நிதி அமைச்சகம் நீண்ட காலமாக பிஎஃப் வட்டியை 8 சதவீதத்திற்குக் குறைக்க வேண்டும் என்று வாதிட்டு வருகிறது என்பது கூடுதல் தகவலாக இருக்கிறது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *