Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

தெய்வங்கள் கனவில் வந்து சொன்னதால் ஜனாதிபதியாக வேண்டும் – மாவட்ட ஆட்சியரிடம் மனு

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்பு 
கூட்டத்தில் திருச்சி, லால்குடி, பெருவளத்தூர் பகுதியை சேர்ந்த முதியவர் தமிழரசன் தான் ஜனாதிபதியாக வேண்டும் என சாமி கனவில் வந்து சத்தியம் வாங்கியதாக மாவட்ட ஆட்சியரிடம் மனு  எழுதி கொடுக்க வந்தார்.


 விஷ்ணு, சிவன் உள்ளிட்ட பல்வேறு தெய்வங்கள் தன் கனவில் வந்து நீ ஜனாதிபதி ஆக வேண்டும் எனக் கூறி சத்தியம் பெற்றுக் கொண்டதாக சொல்லி அதனை ஒரு மனுவாக எழுதி 
மாவட்ட ஆட்சியரிடம் கொடுக்க வந்திருந்தார் தமிழரசன். 


 கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதுபோன்று கனவில் சொன்ன நிலையில், வெளியில் கூறினால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதற்காக தான் சொல்லாமல் மறைத்து 
விட்டதாகவும், ஆனால் தற்போது கனவில் வந்து சத்தியம் வாங்கியதால் இந்த விஷயத்தை மாவட்ட ஆட்சியரிடம் கூறி பிரதமரிடமும், ஜனாதிபதியிடமும் தெரிவிக்குமாறு சொல்வதற்காக மனு அளிக்க வந்துள்ளதாக தெரிவித்தார். 


 இந்நிலையில் இது குறித்து எழுதப்பட்ட மனுவை அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்க கூட்டத்தில் கொடுப்பதற்காக முயற்சி செய்த பொழுது, அங்கிருந்த அதிகாரிகள், நாங்கள் உள்ளே கொடுத்துக் கொள்கிறோம், நீங்கள் சென்று வாருங்கள் என சொல்லி அந்த முதியவரை அனுப்பி வைத்தனர். 


ஆயிரம் குறைதீர் மனுக்கள் திருச்சி மாவட்ட ஆட்சியருக்கு கொடுக்கப்படுகிறது. ஆனால் இந்த மனு ஒரு காமெடி மனுவாகி இன்றயை மக்கள் குறைதீர் கூட்டத்தில் அதிகாரிகள் நகைப்புடன் வாய் மூடி சிரித்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *