Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

திருச்சி விஷன் செய்தி எதிரொலி- 24 மணி நேரத்திற்குள் நடவடிக்கை எடுத்த மாநகராட்சி அதிகாரிகள்

அமைச்சர் தொகுதியில் கோட்ட தலைவரின் வார்டை கண்டுகொள்ளாத மாநகராட்சி அதிகாரிகள் என நேற்று திருச்சி விஷன் செய்தி வெளியிட்டு இருந்தது.  

திருச்சி, தென்னூர் பகுதியில் உள்ள விஸ்வநாதபுரம் சாலையில் குடிநீர் குழாய் பதிக்கும் பணிக்காக கடந்த 15 நாட்களுக்கு முன்பு குழி வெட்டப்பட்டது. இதில் குடிநீர் குழாய் உடைந்துவிட்டது.

இதை பொருட்படுத்தாமல் அவசரம் அவசரமாக குழியை மூடி சென்றனர். இதனால் அதிலிருந்து தினமும் தண்ணீர் வீணாக வெளியேறி அருகில் உள்ள பள்ளி, கோவிலின் முன் தேங்கி நிற்கிறது. பாசான் பிடித்து கொசுக்கள் பரவும் அபாயம் உள்ளது என

நேற்று திருச்சி விஷன் செய்தி வெளியிட்டு இருந்தது. அதன் எதிரொலியாக இன்று காலை மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து குழாய் அடைப்பை சரி செய்தனர். இதை அப்பகுதி பொது மக்கள் பெரிதும் பாராட்டினர். 

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa

#டெலிகிராம் மூலமும் அறிய..

https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *