Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 3 வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை ரூபாய் 35000 ரொக்க பணம் கொள்ளை

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பெஸ்டோ நகரில் வசித்து வருவார் பார்த்திபன் (36). இவர் தனியார் பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் பணிபுரிந்து வருகிறார். இவர் இவருடைய தந்தையாருக்கு வருடாந்திர திதி கொடுப்பதற்கான சொந்த ஊருக்கு சென்றிருந்தார். இந்த நிலையில் மர்ம நபர்கள் இவரின் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 16 சவரன் தங்க நகையும், 25 ஆயிரம் ரூபாய் பணத்தையும் திருடி செய்துள்ளனர்.

இதே போல் நேருஜி நகரில் குடியிருந்து வரும் பழனிச்சாமி விவசாயக் கூலி வேலை செய்து வருபவார். இவர் மனைவி தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று வேலை சென்றிருந்த நிலையில் இவரின் பூட்டை உடைத்து உள்ளே சென்று தோடு செயின் உள்பட நாலு சவரன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் மணப்பாறை அடுத்த காட்டுப்பட்டி பகுதியில் முத்துப்பாண்டி என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்து ரூபாய் 10 ஆயிரம் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதுக்குறித்து மணப்பாறை காவல்துறையினர் சம்பவத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

மேலும் சம்பவ இடத்தில் மணப்பாறை டிஎஸ்பி ராமநாதன், மணப்பாறை காவல் ஆய்வாளர் கோபி மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு கொள்ளை போனது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மணப்பாறை பகுதியில் ஒரே இரவில் மூன்று வீட்டில் அடுத்தடுத்து கொள்ளை போன சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *