Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

2024- 25 ஆம் ஆண்டிற்கான புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா

திருச்சி மாவட்டம் தொட்டியம் நீதிமன்ற வளாகத்தில் 2024- 25 ஆம் ஆண்டிற்கான புதிய வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் பதவியேற்பு விழா மற்றும் இரண்டாம் ஆண்டு  விழா சங்க புதிய தலைவர் சரவணன் தலைமை வகித்தார்.

முன்னதாக அனைவரையும் முன்னாள் சங்க துணைத் தலைவர் என்.செந்தில்குமார் வரவேற்றார். முசிறி குற்றவியல் நீதிபதி ஜெயச்சந்திரன், முசிறி சார்பு நீதிபதி ஜெய்குமார், தொட்டியம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிபதி கோபால கண்ணன், தமிழ்நாடு பாண்டிச்சேரி பார் கவுன்சிலிங் உறுப்பினர்கள் நாமக்கல் அய்யாவு, ராஜேந்திர குமார், முசிறி அரசு வழக்கறிஞர் சப்தகிரி,  புதிய நிர்வாகிகளுக்கு அறிவுரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.

முன்னதாக இந்த நிகழ்ச்சியில் வழக்கறிஞர் சங்க புதிய தலைவராக சரவணன், சங்க துணைத் தலைவர் எஸ்.பி மாணிக்கவாசகம், செயலாளர் குமரேசன், இணைச் செயலாளர் அருணகிரி, பொருளாளர் அண்ணாதுரை ஆகியோர் வழக்கறிஞர் சங்க புதிய நிர்வாகிகளாக பதவி ஏற்று கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் தொட்டியம் முன்னாள் சங்கத் தலைவர் சீவகன், மற்றும் முசிறி தொட்டியம் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள்  காவல்துறையினர், நீதிமன்ற பணியாளர்கள், புதிய நிர்வாகிகளின் உறவினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர் முடிவில் சங்கத் துணை தலைவர் எஸ்.பி மாணிக்கவாசகம் அனைவருக்கும் நன்றி கூறினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *