Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வரும் 27ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் – லாரி உரிமையாளர் சங்கம் அறிவிப்பு!!

வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக லாரி உரிமையாளர் சங்கம் அறிவித்துள்ளனர். ஈகோ பார்க்காமல் போக்குவரத்து துறை அமைச்சர் பேச்சு வார்த்தை நடத்த வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

திருச்சியில் லாரி உரிமையாளர் சங்கம் சார்பில் செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. அப்போது… “உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வேகக்கட்டுப்பாட்டு கருவியை பொருத்த வேண்டும். 2017 முதல் சந்தைக்கு வரும் வாகனங்களுக்கு உற்பத்தியாளர்களே ஜிபிஎஸ் கருவி பொருத்தி கொடுக்கிறார்கள். அந்த வாகனத்தில் கூடுதல் ஜிபிஎஸ் பொருத்த விலக்கு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர்.

Advertisement

மேலும் கேப்பங்கஞ்சியில் நடைபெற்ற லாரி உரிமையாளர்கள் கூட்டத்தில் தேசிய பொதுச்செயலாளர் சண்முகப்பா அளித்த பேட்டியில் டீசல் விலையை குறைக்க வேண்டும்.மாநில எல்லைகளில் செயல்படும் ஆர்டிஓ அலுவலகம் மட்டும் செக் போஸ்ட்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27-ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.

Advertisement

இதனால் தமிழகத்தில் நிலவிய 4 லட்சம் லாரிகள் ஓடாது. மேலும் அண்டை மாநிலங்கள் இருந்து வரும் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட லாரிகளை தடுத்து நிறுத்தப்படும் எனவே போக்குவரத்து துறை அமைச்சர் ஈகோ பார்க்காது உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *