திருச்சி அருகே பெட்டவாய்த்தலை பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது வந்த ஒரு தனியார் வாகனத்தில் சோதனை நடத்திய பொழுது சாக்குமூட்டையில் இருந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் கைப்பற்றினர்.விசாரணையில் முசிறி சட்டமன்ற தொகுதி அதிமுக எம் எல் ஏ வும் தற்பொழுது வேட்பாளருமான செல்வராஜ் வாகனத்தில் வந்த மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் உட்பட 4 நபர்களிடம் விசாரணை நடத்தினர். பணத்தை கைப்பற்றி சார் ஆட்சியர் நிஷான் கிருஷ்ணா நான்கு பேரிடம் விசாரணை நடத்தி ஸ்ரீரங்கம் வட்டாச்சிரியர் அலுவலகம் வர உத்தரவிட்டார்.
பின்னர் சாக்குமூட்டையிலிருந்து ஒரு கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரியும் மாவட்ட ஆட்சியருமான சிவராசு உத்தரவிட்டுள்ளார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
Comments