Saturday, August 16, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சி சமயபுரம் பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதா?

தமிழகத்தில் உள்ள பேரூராட்சி நகராட்சிகள் தரம் உயர்த்தவும், மாநகராட்சி விரிவாக்கம் செய்வதற்கான பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இதற்காக முன்மொழிவு பட்டியல்களை நகர்ப்புற வளர்ச்சித் துறை தயாரித்துள்ளது.

அதன்படி திருச்சி மாவட்டத்தில் இப்போது உள்ள எஸ்.கண்ணனூர் (சமயபுரம்) பேருராட்சி நகராட்சியாக தரம் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக தரம் உயர்த்தப்படும் உள்ளாட்சி அமைப்புகள் அதனோடு இணைக்கப்படும்

நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் விவரங்களை பரப்பளவை 2011ம் ஆண்டு மக்கள் தொகை விவரம் இப்போதைய மக்கள் தொகை உள்ளிட்ட அடிப்படை விவரங்களை அனுப்பி வைக்க அரசு அறிவுறுத்தியுள்ளதாக நகராட்சி நிர்வாகத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

திருச்சி மாவட்டத்தில் ஏற்கெனவே, மணப்பாறை, துறையூர், துவாக்குடி ஆகிய 3 நகராட்சிகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *