Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியிலும் டிரெண்டாகும் “கண்டா வரச்சொல்லுங்க”

நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்நிலையில் அரசியல் கட்சியினர் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணி அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கிடையில் “கண்டா வர சொல்லுங்க” என்கிற தலைப்பில் தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியின் காலடியில் அடகு வைத்த கள்ளக் கூட்டணியை களத்திலேயே காணவில்லை என்கிற வாசகத்துடன் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் ஒட்டப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக திருச்சி மாநகர் பல்வேறு பகுதியில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோரின் புகைப்படங்களை கேலி சித்திரங்களாக மாற்றி போஸ்டருக்கு கீழே திருச்சி நாடாளுமன்ற தொகுதி மக்கள் என்று அச்சிட்டு ஒட்டி உள்ளனர்.

திருச்சி மாநகரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் குறித்து நைட் செய்தியாளர்கள் திருச்சி எம்பி திருநாவுக்கரசிடம் கேள்வி கேட்டதற்கு, அவர் ஆவேசமாக பதில் அளித்தது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *