Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி நவலூர் குட்டப்பட்டில் ஜல்லிக்கட்டு

திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியம் நவலூர் குட்டப்பட்டு கிராமத்தில்  மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி துவக்கி வைத்தார். முன்னதாக  காளையர்களும், காளைக்கும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு போட்டியில் களம் காண அனுமதித்துள்ளனர்.

நவலூர் குட்டப்பட்டு அடைக்கல மாதா ஆலயம் முன்னதாக உள்ள பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சீறி பாய்ந்து வரும் காளைகளை அடக்கும் காளையர்களுக்கும்  வீட்டு உபயோக பொருட்கள் கட்டில், சைக்கிள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படுகிறது.

மிக முக்கியமாக வெற்றி பெறும் காளை மற்றும் காளளையர்களுக்கும் தென்னங்கன்று வழங்கப்பட்டு வருகிறது. இப் போட்டியில் 700 காளைகள் 450 மாடுபிடி வீரர்களும் களத்தில் இறங்குகின்றனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *