Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஜல்லிக்கட்டு போட்டி- 700 காளைகள், 250 காளையர்கள் பங்கேற்பு

திருச்சி மாவட்டம்மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி அருகே உள்ள பழைய பாளையத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஆலய திடலில்  ஜல்லிருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த பழைய பாளையத்தில் ஸ்ரீ வரதராஜ பெருமாள் மற்றும் பட்டத்தளச்சி அம்மன்  கோவில் சித்ரா பௌர்ணமி திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை ஆலயம் வளாகத்தில் தொடங்கியது.

ஜல்லிக்கட்டு போட்டியை ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், டி.எஸ.பி. ராமநாதன கொடியசைத்து துவக்கி வைத்தனர். போட்டியில் 700 காளைகள், 250 காளையர்கள் களம் கண்டுள்ளனர்.

ஆலயத்தில் ஊர் காளைகளுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்ட பின் வாடிவாசலில் அவிழ்க்கப்பட்டதையடுத்து, திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மாவட்டத்திலிருந்து வந்துள்ள காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டு வருகிறது. 50, 50 தொகுப்பாக காளையர்கள் களத்தில் உள்ளனர். 

வாடிவாசல் வழியே திமிறி சீறிபாய்ந்த காளைகள் காளையர்களை கலங்கடித்த நிலையில் நின்று விளையாடியது. சில காளையர்கள் தொட்டு கூட பார்க்க முடியாதபடி சீறிபாய்ந்தது. இருப்பினும் சில காளைகளை வீரர்கள் திமில் பிடித்து தழுவினர். காளைகளை பிடித்த வீரர்களுக்கு வெள்ளிக்காசு, சைக்கிள்,

பீரோ, கட்டில், பாத்திரங்கள், என பரிசுகள் வழங்கப்பட்டு வருகிறது. வீரர்களின் கைகளில் பிடிபடாத காளையின் உரிமையாளர்களுக்கும் பரிசுகள் வழங்கப்படுகிறது. பாதுகாப்பு பணியில் மணப்பாறை காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பால்வண்னநாதன் தலைமையில் 150 க்கு மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். 

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *