Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

முதல்வரின் அறிவிப்புக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் நன்றி

மதுரை மாவட்டம் பாலமேட்டில் இன்று (16.01.2023) நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெற்று படுகாயம் அடைந்து சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்த திரு.அரவிந்த்(24) மற்றும் திருச்சி மாவட்டம் சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியை காண வந்த போது எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ள புதுக்கோட்டையை சேர்ந்த திரு.அரவிந்த்(25) ஆகியோரின் குடும்பங்களுக்கு ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலை மிக வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இதுவரை வரலாற்றில் இல்லாத விதமாக உயிரிழந்துள்ள நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவியாக 3 லட்ச ரூபாய் வழங்கி உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும் ஜல்லிக்கட்டில் பங்குபெறும்  மாடுபிடி வீரர்கள் அனைவருக்கும் காப்பிடு வசதி செய்து தர வேண்டி மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் கோரிக்கை வைக்கிறோம்.

இனி வரும் காலங்களில் ஜல்லிக்கட்டு போட்டியில் பங்குபெறும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் மிகவும் பாதுகாப்பான முறையில் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டுமென ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நல சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவிப்பதாகஜல்லிக்கட்டு ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *