Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நகை திருட்டு – மூதாட்டி சடலமாக மீட்பு – எஸ்.பி. விசாரணை

திருச்சி மாவட்டம் மணப்பாறை மஸ்தான் தெருவை சேர்ந்த தொழிலதிபர் நாகப்பன் இவரது  மனைவி கல்யாணி (69). இவர் நேற்று வீட்டில் தனியாக இருந்த நிலையில்  உள்ளே சென்ற மர்ம நபர்கள் கல்யாணி அணிந்திருந்த 17 பவுன் தங்க நகை , ஒரு பவுன் வைரத் தோடு மற்றும் வீட்டில் இருந்த 30 ஆயிரம் பணம் ஆகியவற்றை  கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

மேலும் வீட்டின் அடுப்படியில் கல்யாணி மர்மான முறையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இச்சம்பவம் பற்றிய தகவல் அறிந்த மணப்பாறை டி.எஸ்.பி.மரியமுத்து மற்றும் ஆய்வாளர் குணசேகரன்   சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் நிலா  வரவழைக்கப்பட்டு வீட்டிலிருந்து சிறிது தூரம் ஓடி மீண்டும் வீட்டின் அருகே வந்து நின்றது. இதனை தொடர்ந்து மணப்பாறை காவல்துறையினர் மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனை அறிக்கைக்காக  மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து போலீசார் அப்பகுதியில் உள்ள சிசிடிவிகளை வைத்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *