Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார் க.ஜோஷி நிர்மல் குமார்

திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவராக க.ஜோஷி நிர்மல் குமார் பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு முன்பாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத் துறையில் காவல்துறை தலைவராக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பணியாற்றியுள்ளார்.

மேலும், இவர் 2002-ஆம் ஆண்டு துணை காவல் கண்காணிப்பாளராக திருப்பூர், ஓசூர், தர்மபுரி, பவானி மற்றும் STF ஈரோடு ஆகிய இடங்களிலும், கூடுதல் காவல் கண்காணிப்பாளராக சேலம் நகர PEW பிரிவிலும் காவல் கண்காணிப்பாளராக கரூர், திருவண்ணாமலை, DVAC, துணை ஆணையராக சென்னை சட்டம் ஒழுங்கு மற்றும் போக்குவரத்து துறையிலும், இணை ஆணையராக சென்னை வடக்கு மண்டலம் காவல்துறை துணை தலைவராக நுண்ணறிவு பிரிவு, திண்டுக்கல் சரகத்திலும் பணியாற்றினார்.

காவல்துறை தலைவராக 2020-ம் ஆண்டில் பதவி உயர்வு பெற்று காவல் தலைமையகம், நிர்வாக துறை, தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம் மற்றும் குற்றப்புலனாய்வு துறையிலும் பணியாற்றியுள்ளார். மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களிலும் தமிழ்நாடு முதல்வர் ஆணைக்கேற்ப போதைப் பொருட்கள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழித்திட 2025ம் ஆண்டில் அதிக முக்கியத்துவம் தரப்படும் என்றும்,

கஞ்சா குட்கா மற்றும் இதர போதைப் பொருட்களை கடத்துதல், பதுக்குதல், சட்ட விரோதமாக விற்பனை செய்யும் குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளார். மேலும் இது போன்ற குற்றங்களில் தொடர்ந்து ஈடுபடும் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்று எச்சரித்துள்ளார்.

மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை குறைப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தொடர்ந்து எடுக்குமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும் தகுந்த அறிவுரைகளை வழங்கியுள்ளார். பொதுமக்கள். காவல் நிலையங்கள் மற்றும் உயர் அதிகாரிகளிடம் அளிக்கும் புகார் மனுக்கள் மீது முறையாக விசாரணை நடத்தி விரைந்து தீர்வு காணுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மணல் கடத்தல். சட்டவிரோதமாக சாராய விற்பனை, லாட்டரி விற்பனை போன்ற சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தி உள்ளார். இணையதள மோசடிக் குற்றங்களிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து பொதுமக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களையும் கேட்டுக் கொண்டுள்ளார்.

சட்ட விரோத மற்றும் பொது மக்களுக்கு அச்சுறுதல் ஏற்படுத்தும் வகையில் குற்ற செயல்களில் ஈடுபடும் ரௌடிகள் மற்றும் சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு குண்டர் தடுப்பு சட்டத்தில் கீழ் சிறையில் அடைக்கப்படுவர் என்றும் எச்சரித்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *