Site Logo mobile
Search Icon
Mobile Gif
Upcoming Events

திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா பேரணி -அமைச்சர் அறிவிப்பு

திருச்சி தெற்கு மாவட்டத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மாபெரும் பேரணி !கழக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு பங்கேற்பு !மாவட்டச் செயலாளர் – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவிப்பு !

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுடைய நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் படி 03/06/2024 ஆம் தேதி மாலை 3 மணிக்கு திருச்சி அண்ணா ஸ்டேடியம் ரவுண்டானா முதல் டி.வி.எஸ் டோல்கேட் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் சிலைக்கு கழக முதன்மை செயலாளர் அமைச்சர் கே. என். நேரு அவர்கள் பங்கேற்கின்றார், கழக நிர்வாகிகளுடன் ஊர்வலமாக சென்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளோம். 

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 03/06/2024 திங்கட்கிழமை காலை பகுதி, ஒன்றிய, நகர,பேரூர், வட்ட, வார்டு, கிளை கழகங்களில் கழக இருவண்ண கொடியேற்றி முத்தமிழறிஞர் கலைஞர் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்திட வேண்டும், கழகத்தினர் தங்கள் இல்லங்கல் முன்பாக “கலைஞர் 100” என்ற வரியுடன் கோலமிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கின்றேன். 

இந்த நிகழ்வில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட வார்டு கிளைக் கழக செயலாளர் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட – மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், தவறாமல் கலந்து கொள்ளுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றேன். 

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

 https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd

டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *