கோடை காலத்தில் ஏற்பட்டுள்ள திடீர் பருவ கால மாற்றத்தால் காய்ச்சல் மற்றும் ஜலதோஷம் பரவி வருவதால் வழக்கறிஞரின் நலன் கருதி இன்று திங்கட்கிழமை 19/05/2025காலை 10 மணிக்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தில் மாண்புமிகு நீதிபதிகள் M. அனு சுருதி, V. பரம்வீர், S. முகமது சுஹையில், M. விஜயா, M. டார்வின்

முத்து, M. S. சுப்பிரமணியன், V. ஜெயமுருகன் ஆகியோர் தலைமையேற்று கபசுர குடிநீர் வழக்கறிஞர்களுக்கு வழங்கினார்கள் நிகழ்ச்சியில் குற்றவியல் வழக்கறிஞர் சங்கத் தலைவர் முல்லை P. சுரேஷ், நிர்வாகிகள்
சசிகுமார், பிரபு, கிஷோர் குமார்,விஜய் நாகராஜன், ஜானகிராமன், முருகேசன்,கம்பன், கௌசல்யா எழிலரசி மற்றும் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
388
19 May, 2025







Comments