கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 122வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அவரது திருஉருவ சிலைக்கு திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்கள்.
இந்நிகழ்ச்சியில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி மாநகராட்சி மேயர் அன்பழகன், சேர்மன் துரைராஜ் , டோக்கேட் சுப்பிரமணி பகுதி செயலாளர் மோகன் தாஸ் , கமல் முஸ்தபா, நாகராஜன், இளங்கோ தொமுச குணசேகர், கிராப்பட்டி செல்வம், கருமண்டபம் சுரேஷ் சர்ச்சில், பரமசிவம் கருத்து கதிரேசன், உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதே போன்று தெற்கு மாவட்ட கழக செயலாளரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி தலைமையில் மாநகரக் கழக செயலாளர் மு.மதிவாணன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினர். இந்நிகழ்வில் தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன்,
துணை மையர் திவ்யா, பகுதி கழகச் செயலாளர் மோகன், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை செயலாளர்கள், நிர்வாகிகள், தலைமைச் செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட மாநகர அணிகளின் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மற்றும் தொண்டர்கள் கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments