Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சி அரசு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை

திருச்சி மாவட்டம் அதவத்தூர் சங்கன்காட்டை சேர்ந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் சர்க்கரை நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நிரந்தர சிறுநீரக செயலிழப்பினால் அவதியுற்றார் அவர் கடந்த ஆறு மாதங்களாக மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் உள்ள சிறுநீரகவியல் பிரிவில் முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் வாரம் இருமுறை டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்தார்.

அவருடைய நெருங்கிய உறவினர்களிடமிருந்து சிறுநீரக தானம் பெற இயலாததால் தமிழக அரசின் டிரான்ஸ்டன் இணையதளத்தில் சிறுநீரக தானம் பெறுவதற்காக பதிவு செய்யப்பட்டது (09.11.2022) அன்று திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மூளை சாவு ஏற்பட்ட 35 வயது உடைய நபரிடமிருந்து சிறுநீரக தானம் பெறப்பட்டது. சிறுநீரகம் திருச்சி  மருத்துவமனைக்கு அரசு அவசர உறுதி மூலம் கொண்டுவரப்பட்டது பெறப்பட்ட சிறுநீரகத்தை நோயாளிக்கு

மருத்துவமனை மருத்துவர்கள் குழு வெற்றிகரமாக சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை செய்து பொருத்தினார்கள் நோயாளி தற்போது நலமுடன் உள்ளார் இந்த சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை ஆனது. மகாத்மா காந்தி அரசு மருத்துவமனை கி.ஆ.பெவிசுவநாதன் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பத்தாவது சிறுநீரக மாற்ற அறுவை சிகிச்சை ஆகும் முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *