திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டையில் கள்ளக்காதல் விவகாரம் – பெண்ணை கொலை செய்துவிட்டு கொலையாளி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள மேலகல்கண்டார் கோட்டை பழைய அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவரது மகன் வினோத்குமார் வயது 36. இவர் தனியார் வங்கியில் கலெக்சன் ஏஜெண்டாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு முதல் திருமணம் ஆகி விவாகரத்தான நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டு அதுவும் தற்போது விவாகரத்து நிலையில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மேல கல்கண்டார் கோட்டை நாகம்மை வீதி விஸ்தரிப்பு பகுதியில் உள்ள தந்தை சுந்தர மூர்த்தி வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்லும்போது எதிர் வீட்டில் உள்ள சீனிவாசனின் மனைவி புவனேஸ்வரி என்பவருடன் பழக்கம்ஆனார்.
இந்த பழக்கம் நாளடைவில் இருவருடைய கள்ளக்காதலாக மாறியது. இந்நிலையில் இன்று காலை வினோத்குமார் கள்ளக்காதலி புவனேஸ்வரி வீட்டிற்கு வந்து தான் கையில் வைத்திருந்த கத்தியால் புவனேஸ்வரி கழுத்து மற்றும் உடலில் குத்தி கொலை செய்துவிட்டார்.
இதனை தொடர்ந்து வினோத்குமார் அருகில் உள்ள தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்த பொன்மலை காவல் உதவி ஆணையர் காமராஜ், இன்ஸ்பெக்டர் தனசேகர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் கொலை நடந்த இடத்திற்கு மாநகர துணை ஆணையர் ஸ்ரீதேவி நேரில் வந்து விசாரணை நடத்தினார்.
மேலும் தடயஅறிவியல் நிபுணர்கள் , மோப்பநாய் பொன்னி ஆகியோர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
புவனேஸ்வரியின் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதேபோல் தண்டவாளத்தில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட வினோத்குமாரின் உடலை ரயில்வே போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய… https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments