Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலய திருக்கோவில் கும்பாபிஷேகம்

திருச்சி மாநகர் மதுரை ரோடு வள்ளுவர் நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் அமைந்துள்ளது. இத்திருக்கோவிலுக்கு நேற்று அய்யாளம்மன் படித்துறையிலிருந்து திருமஞ்சனம், புனித நீர் எடுத்துவரப்பட்டது.

தொடர்ந்து மாலை வாஸ்து சாந்தி முதலிய பூர்வாங்க பூஜைகளோடு முதல் கால யாகசாலை துவங்கி நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை கோ பூஜையுடன் இரண்டாம் கால யாக பூஜை துவங்கி 9:45 க்கு செல்வ விநாயகர் கோபுர கலச கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது. 

இந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *