Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ பாப்பா மாரியம்மன், ஸ்ரீ வள்ளி தெய்வானை ஆண்டவர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள வேங்கூர் கிராமம் மேலமுருக்கூரில் அருள் பாலித்து வரும் ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ பாப்பா மாரியம்மன், ஸ்ரீ வள்ளி தெய்வானை ஆண்டவர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழாவானது வெகு விமர்சையாக நடைபெற்றது.

இந்த கும்பாபிஷேக பணிக்காக கடந்த 12ம் தேதி காவிரியில் நதியிலிருந்து புனித நீர் எடுத்துட்டு வந்து அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம் உள்ளிட்ட பல்வேறு பூஜைகளுடன் முதலாம் கால யாகசாலை பூஜைகளுடன் தொடங்கியது. தொடர்ந்து 13ம் தேதி இரண்டாம் கால யாகசாலை பூஜைகள், யந்திர ஸ்தாபனம் அஷ்ட பந்தன மருந்து சாத்துதல் நிகழ்வுகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மூன்றாம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றது.

முக்கிய நிகழ்வாக இன்று காலை நான்காம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்ற பின்னர் மங்கள வாத்தியத்துடன் கடம் புறப்பாடு நடைபெற்று தொடர்ந்து ஸ்ரீஆதி விநாயகர், ஸ்ரீபாப்பாங்குளத்து மாரியம்மன், ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவரின் மூலஸ்தான கோபுர கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் ஊற்றப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் ஸ்ரீ ஆதி விநாயகர் ஸ்ரீ பாப்பாங்குளத்து மாரியம்மன் மற்றும் ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத செந்தில் ஆண்டவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மகாதீபாராதனை நடைபெற்றது. இதில் உள்ளூர் மற்றும் வெளியூர் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *