திருச்சி சமயபுரத்தில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகள் அகற்றம் -லால்குடி வருவாய் கோட்டாட்சியர் அதிரடி
திருச்சி மாவட்டம் மணச்சநல்லூர் அடுத்த சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது.சக்தி ஸ்தலங்களில் மிகவும் பிரசித்த பெற்ற ஸ்தலமாக சமயபுரம் மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது .
இத்திருக்கோவிலுக்கு திருச்சி மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தந்து அம்மனை தரிசனம் செய்து தங்களது நேர்த்தி கடனை செலுத்துவது வழக்கம்.இந்த ஆண்டு சித்திரை தேரோட்டம் வரும் ஏப்ரல் 15 ம் தேதி நடைபெற உள்ளது .
தேர் வலம் வரும் விதிகளில் ஆக்கிரமித்து அமைக்கப்பட்டிருந்த கடைகளை இலால்குடி வருவாய் கோட்டாட்சியர் தலமையில் சிவசுப்பிரமணியன், மண்ணச்சநல்லூர் வட்டாட்சியர் பழனிவேல் மேற்பார்வையில் , கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் இளேங்வேன் மற்றும் பிச்சுமணி , சுகந்தி
ராஜாசேகர் , லச்சுமனன் ஆகியோர் முன்னிலையில் ,பேரூராட்சி தலைவர் சரவணன் மற்றும் செயல் அலுவலார் மற்றும் பணியளர்கள் ஆக்கிரமிப்பில் இருந்த கடைகளை அகற்றும் செய்தனர் .சித்திரைத் தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் செய்த வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments