Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

எஸ்.ஆர்.எம் திருச்சி செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழா நடைபெற்றது

எஸ்.ஆர்.எம் திருச்சி செவிலியர் கல்லூரியின் முதலாமாண்டு மாணவிகளுக்கான விளக்கேற்றி உறுதிமொழி எடுக்கும் விழாவானது 13.02.2025 அன்று கல்லூரி வளாகத்தில் இனிதே நடைபெற்றது. டாக்டர். சுஜா சுரேஷ், முதல்வர், திருச்சி செவிலியர் கல்லூரி. வரவேற்புரையாற்றினார். விருந்தினர்கள் குத்து விளக்கேற்ற அதனைத் தொடர்ந்து முதலாமாண்டு மாணவிகளின் விளக்கேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. டாக்டர் ராஜாமணி செவிலிய டீன் நைட்டிங்கேல் உறுதிமொழியை முன்மொழிய மாணவர்கள் அனைவரும் நைட்டிங்கேல் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மாணவர்கள் விழாவினை டாக்டர்.ஆர்.சிவகுமார், தலைவர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) தலைமையேற்று தலைமை உரையாற்றி சிறபித்தார்.

 டாக்டர்.என்.சேதுராமன், தலைமை இயக்குனர், எஸ்.ஆர்.எம் குழும நிறுவனங்கள் (இராமாபுரம் மற்றும் திருச்சி வளாகம்) அவர்கள் சிறப்புரையாற்றினார். டாக்டர்.எஸ்.ரேவதி, டீன் திருச்சி எஸ்.ஆர்.எம் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம், டாக்டர். என்.பாலசுப்ரமணியன், இணை இயக்குனர், எஸ்.ஆர்.எம் திருச்சி வளாகம் வாழ்த்துரை வழங்கினார். தலைமை விருந்தினராக டாக்டர். ஜி.சி.கோபிநாத் , இணை இயக்குனர், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார சேவை, திருச்சி பங்கேற்று தலைமை விருந்தினர் உரையாற்றினார். 
அவர் உரையில் செவிலியர் பணியின் முக்கியத்துவத்தை பற்றி  வலியுறுத்தினர்.   நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.

விருந்தினர் உரையாற்றினார். அவர் உரையில் செவிலியர் பணியின் முக்கியத்துவத்தை பற்றி  வலியுறுத்தினர்.   நாட்டுப்பண் இசைக்க விழா இனிதே நிறைவுற்றது.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *