Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

நடுரோட்டில் வழக்கறிஞர் வெட்டிக்கொலை

திருச்சி பீமநகர் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோபி கண்ணன் (35). இவருக்கு கோதையேஷ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில் இவர் திருச்சி நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வந்தார். விடுமுறை நாளான இன்று தனது குழந்தைக்கு சைக்கிள் கற்றுக் கொடுப்பதற்காக பீமநகர் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது 5 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி ஓடி உள்ளனர்.

இது குறித்து தகவலறிந்து வந்த கண்டோன்மெண்ட் போலீசார் கோபிகண்ணன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஹோமத்குமார் என்பவர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக கோபி கண்ணன்  செயல்பட்டதாகவும் அந்த முன்விரோதம் காரணமாக
ஹோமத்குமார் தரப்பினர் கொல்லப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் கொலை நடந்துள்ள இடத்தில் இருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு கொலையாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Hb7keSxfvguFoCh6GAszzd

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *