Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் வீட்டின் கூரையின் மீது சாய்ந்த மின் கம்பங்கள் அச்சத்தில் பொதுமக்கள்

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்துள்ள ஆதனூர் கிராமத்தில் நாயக்கர் தெருவில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மின் கம்பங்களில் இருந்து அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. இன்று திடீரென மின்கம்பங்கள் வீட்டின் கூரை மேல் விழுந்தது.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் சிலர் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை. கிராமப்புறம் என்பதால் பொதுமக்கள் அனைவரும் வயல் வேலைகளுக்கு சென்றுள்ளனர்.

குழந்தைகள் பள்ளிகளுக்கும் சென்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. ஊரில் உள்ள படித்த இளைஞர்கள் இச்சம்பவத்தை துறையூர் மின்சாரவாரியத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் அங்கு வந்த மின்சார ஊழியர்கள் அப்பகுதியில் மின் நிறுத்தம் செய்தனர்.

இதனால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுத் தேர்வு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சமயத்தில் இப்படி இருள் சூழ வைத்துள்ள மின்சாரவாரியத்தினர் இப்பகுதிக்கு விரைவாக புதிய மின் கம்பங்கள் மாற்றி தர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…
https://chat.whatsapp.com/KcBH2dNkjS3L0PtBywzMtp

#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *