Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

வீடு கட்ட தோண்டப்பட்ட குழியில் விழுந்து  சிறுமி பலி – இட உரிமையாளர், காண்ட்ராக்டர் கைது!!

Advertisement

திருச்சி ஏர்போர்ட் ராஜமாணிக்கம் பிள்ளை நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல் இவர் கார் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இவர் வீட்டின் அருகே காலி மனையில் வீடு கட்டுவதற்காக பள்ளம் பறிக்கப்பட்டு இருந்தது. அந்த பகுதியில் இவரது மகள் பாண்டிஸ்ரீ விளையாடிக் கொண்டிருந்த போது தவறி சுமார் 4 அடி ஆழத்தில் உள்ள மழைநீர் தேங்கி இருந்த குழிக்குள் விழுந்து உயிரிழந்ததுள்ளார்.

Advertisement

ஏர்போர்ட் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து சக்திவேல் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அந்த காலி மனையின் உரிமையாளர் கேகே நகர் சுப்ரமணிய தெருவை சேர்ந்த மாதேஸ்வரன்(40) மற்றும் காண்ட்ராக்டர் லால்குடி வெங்கடேஸ்வரா நகரை சேர்ந்த நிர்மல்(27) ஆகிய இரண்டு பேரை கைது செய்தனர்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *