Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

லிஃப்ட் கேட்ட பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தவர் கைது

திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே திருமணமான பெண்ணுக்கு லிஃப்ட் கொடுப்பது போல் இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று பாலியல் பலாத்காரம் செய்த நபரை போலீசார் கைது செய்தனர். பெரம்பலூர் மாவட்டம், சிறுகன்பூரை சேர்ந்த 42 வயதுடைய பெண். கடந்த சில தினங்களுக்கு முன்பு திருச்சி மாவட்டம், சிறுகனூர் அருகே உள்ள ரெட்டிமாங்குடி கிராமத்தில் உள்ள தனது தங்கை வீட்டிற்கு வந்துள்ளார்.

நேற்று மதியம் பெரம்பலூருக்கு செல்வதற்காக ரெட்டிமாங்குடி பேருந்து நிறுத்தத்தில் பேருந்திற்காக காத்துக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ரெட்டிமாங்குடியை சேர்ந்த 46 வயதுடைய சுரேஷ் அந்த பெண்ணிற்கு லிஃப்ட் கொடுப்பது போல் இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள முட்புதற்குள் அழைத்துச் சென்றுள்ளார்.

சுதாரித்துக்கொண்ட பெண் சத்தம் போடவே அவருக்கு கொலைமிரட்டல் விடுத்த சுரேஷ் அந்த பெண்ணை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுகனூர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின்பேரில் போலீசார் சுரேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *