Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மணிப்பூர் கொடூரம் : மத்திய வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

திமுக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில் மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை நிகழ்வுகளுக்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசே கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன் காதிகிராப்ட் அருகே மாவட்ட துணை செயலாளர் விஜயா ஜெயராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் 500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு மணிப்பூர் கலவரத்தை நிறுத்தவும், பெண்ணை பாலியல் தொல்லை கொடுத்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வலியுறுத்தியும் கண்டன கோஷங்களை எழுப்பினர்..

இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மண்டல குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட மகளிர் அணியினர் பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *