Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாசித் தேர்த்திருவிழா – ஆதிமாரியம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி உலா.

திருச்சி மாவட்டம் சமயபுரம் அருகே இனாம்சமயபுரத்தில் பிரசித்தி பெற்ற ஆதிமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் மாசித் தேர்த்திரு விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த தேர்த் திருவிழாவையொட்டி கடந்த 11ந் தேதி பூச்சோரிதல் விழா தொடங்கியது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான மாசித் தேர்த் திருவிழா 26ந் தேதி திங்கட்கிழமை தொடங்கியது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நேற்று முன்தினம் மரகேடயத்ததில் எழுந்தருளினார். இதனை தொடர்ந்து 2ம் நாளான நேற்று அம்மன் சிம்ம வாகனத்தில் தேரோடும் வீதிகளில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் இரவில் பல்வேறு வாகனங்களில் அம்மன் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாசித் தேரோட்ட விழா வருகின்ற மார்ச் 3-ந் தேதி காலை 09:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை சமயபுரம் மாரியம்மன் கோவில் இணை ஆணையர் கல்யாணி, கோவில் பணியாளர்கள், குருக்கள்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *