Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாபெரும் தேர்தல் பரப்புரை- அமைச்சர் அழைப்பு

திருச்சி – கரூர் நாடாளுமன்ற தொகுதி உரிமைகளை மீட்க,  ஸ்டாலினின் குரல் – பாசிசம் வீழட்டும்! இந்தியா வெல்லட்டும் என்ற தலைப்பில் மாபெரும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. திருச்சியில் கழக பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., கரூரில் கழக துணை பொதுச் செயலாளர் ஆ. இராசா எம்.பி, சிறப்புரையாற்றுகிறார்,  மாவட்ட செயலாளர் அமைச்சர் – அன்பில் மகேஸ் பொய்யாமொழி அழைப்பு விடுத்துள்ளார்.

வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலையொட்டி, திருச்சி – கரூர் நாடாளுமன்றத் தொகுதியில் “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” மாபெரும் தேர்தல் பரப்புரை கூட்டம் திருச்சியில் (17.02.2024)ஆம் தேதி சனிக்கிழமை மாலை 05:00 மணிக்கு புத்தூர் நால் ரோட்டிலும், அதே போல கரூரில் (18.02.2024) ஆம் தேதி ஞாயிற்றுகிழமை மாலை 06:00 மணிக்கு கரூர் பேருந்து நிலையம், திருவள்ளுவர் திடலிலும் நடைபெறும் இக்கூட்டங்களுக்கு திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள கழகத்தினர் அனைவரும் அலைகடலென திரண்டு வந்து பங்கேற்கும்படி மாவட்ட செயலாளர் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

இது குறித்து அவரது அறிக்கை வருமாறு :

 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக, அதிமுக அரசின் 10 ஆண்டு கால முறையற்ற நிர்வாகம், மக்களின் குறைகள், மக்கள் பட்ட துன்பங்களை நேரடியாக கேட்டறிந்திட தமிழ்நாடு முழுவதும் கழகத்தினர் (விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்) என்ற தேர்தல் பரப்புரையை நடத்தி, அராஜக அதிமுகவை மக்கள் நிராகரிக்கப்பதற்கான அடித்தளமிட்டனர். வர இருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த 10 ஆண்டு காலத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தமிழ்நாட்டுக்கு இழைத்த அநீதிகளையும், ஒன்றிய அரசிடம் மாநிலத்தின் உரிமைகளை அடகு வைத்து,

தற்போது நாடகமாடும் அடிமை அதிமுகவின் துரோகங்களையும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், முதற்கட்டமாக “உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் நாடாளுமன்ற தொகுதி வாரியாக தேர்தல் பரப்புரை கூட்டங்களை நடத்திட வேண்டுமென்று நாம் நாளும் உயிராய் போற்றி வணங்கும் நம்முடைய உயிரினும் மேலான கழக தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, நடைபெறும் இக்கூட்டங்களில் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள், நிர்வாகிகள், மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பாக முகவர்கள் (BLA-2), பாக பொறுப்பாளர்கள் (BLC), உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கழக தொண்டர்களும், பொதுமக்களும் தவறாமல்கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *