Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க மேயர் உத்தரவு

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி உறையூர் பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டப் பணிகளை விரைந்து முடிக்க மேயர் மு.அன்பழகன் நேரில் பார்வையிட்டு பொறியாளர்களுக்கு உத்தரவிட்டார் .

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மண்டலம் எண் 5/ வார்டு எண்: 23 உறையூர் பாளையம் பஜார் பகுதியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்ட பணிகளை  மேயர் மு. அன்பழகன் அவர்கள் மண்டலத் தலைவர்  விஜயலட்சுமி கண்ணன், உதவி செயற்பொறியாளர்  ராஜேஷ் கண்ணா/ மாமன்ற உறுப்பினர் சுரேஷ்குமார்,

உதவி ஆணையர் சதீஸ்குமார் ஆகியோருடன் அப்பகுதியில் நேரில் ஆய்வு செய்துபணிகளை விரைந்து முடிக்க அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும் பொது மக்களுக்கு இடையூறு இன்றிபணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவித்தார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *