Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

பேருந்து ஓட்டுனர் நடத்துனர்களுக்கு மருத்துவ பரிசோதனை

 தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் லிமிடெட் திருச்சி மண்டலம் மற்றும் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் தேசிய சாலை பாதுகாப்பு மாதம் 2024 கடந்த (15 .1 .2024) முதல் (14.2.2024) வரை அனுசரிக்கப்பட்டு வருகிறது. இதனை கொண்டாடும் பொருட்டு இன்று (06.02.2024) தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மத்திய பேருந்து நிலையத்தில் ஓட்டுநர் நடத்துனருக்கு மற்றும் பொதுமக்களுக்கு போக்குவரத்து சின்னங்கள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக துணை ஆட்சியர்  சக்திவேல், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருச்சிராப்பள்ளி மண்டல பொது மேலாளர் எஸ். சக்திவேல் ஆகியோர் வழங்கினார்கள்.

இளநிலை நிர்வாக அலுவலர், அண்ணா நிர்வாக பணியாளர் கல்லூரி, மண்டல மையம் திருச்சிராப்பள்ளி மாவட்டம் தலைமையில் சிறப்பு அழைப்பாளராக அகர்வால் கண் மருத்துவமனை முதன்மை மருத்துவர் ராமலிங்கம் மூலம் திருச்சி மண்டல அலுவலகத்திலும் மத்திய பேருந்து நிலையத்திலும் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் ஓட்டுநர் நடத்துனர்களின் உடல்நலம் மேம்படுத்தும் பொருட்டு ராக்ஸ் மருத்துவமனை மதுரை மூலம் சிறப்பு கட்டணமில்லா மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் துணை மேலாளர் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், உதவி கிளை மேலாளர் மகேந்திரன், உதவி பொறியாளர் ( பயிற்சி )மற்றும் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *