திருச்சி விமான நிலையத்திற்க்கு கோலாலம்பூரில் இருந்து வந்த விமானத்தில் பயணம் செய்த பயணிகளிடம் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்பொழுது சந்தேகத்திற்குரிய மூன்று பேரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது மேலும் சந்தேகம் எழுந்த நிலையில், சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். இரண்டு ஆண் பயணிகள் தங்கள் அணிருந்த உள்ளாடையில் தங்க பேஸ்டுகளை மறைத்து எடுத்து வந்துள்ளனர். மேலும் ஒரு பெண் பயணிடம் சானிட்டரி நாப்கினில் தங்கத்தை மறைத்து தங்க பேஸ்டை கடத்தி வந்தது தெரிந்தது.
மூன்று பேரையும் பிடித்து 1414 கிராம் தங்க பேஸ்டுகளை பறிமுதல் செய்தனர். 89 லட்சத்து 51 ஆயிரம் மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்து 3 பேரையும் வான் நுண்ணறிவு சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments