Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மிக்ஜாம் புயல் – சென்னைக்கு புறப்பட்ட திருச்சி மாநகராட்சி பணியாளர்கள்

மிக்ஜாம் புயல் சென்னையில் கரையை கடக்க உள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்து வருவதால், சென்னை முழுவதும் மழை நீரால் சூழப்பட்டிருக்கிறது. வாகனங்கள் வீடுகள் மழை நீரில் மூழ்கியுள்ளன. பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மிக்ஜாம் புயல் நிவாரண பணிக்கு சென்னைக்கு திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மூலம் 250 தூய்மை பணியாளர்கள் மற்றும் 10 தூய்மை பணி மேற்பார்வையாளர்கள், மூன்று சுகாதார அலுவலர்கள் வெள்ள தடுப்பு உபகரணங்களுடன் ஐந்து பேருந்துகள் மூலம் இன்று மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் மரு.இரா.வைத்திநாதன் ஆகியோர் கொடி அசைத்து வழி அனுப்பி வைத்தனர்.

அருகில் மண்டலத் தலைவர் துர்கா தேவி, நகர் நல அலுவலர் மணிவண்ணன், மாநகராட்சி உதவி ஆணையர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய..

https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO

#டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *