Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஓட்டுப்போடும் நீங்கள்தான் எஜமானர்கள் என அமைச்சர் அன்பில் மகேஸ் தேர்தல் பரப்புரையில் பேச்சு

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தெற்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் பள்ளிக்கல்வித் துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் முதற்கட்ட பிரச்சாரத்தை இன்று காலை தொடங்கினார். மலைக்கோட்டை பகுதி கழக செயலாளர் 16வது வட்ட தி.மு.க. வேட்பாளர் மு.மதிவாணன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க அமைச்சர் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி வேட்புமனுதாக்கல் கடந்த 28-ந்தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை நடைபெற்றது. நேற்று (சனிக்கிழமை) வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர். நாளை (திங்கட்கிழமை) வேட்புமனுக்கள் திரும்ப பெற கடைசி நாளாகும். வருகிற 19-ந் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று, 22-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையடுத்து நீங்கள் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என கட்சி வேட்பாளர்கள், சுயேட்சை வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

நீங்கள் யாருக்கு ஓட்டு போட வேண்டும் எந்த கட்சிக்கு ஓட்டு போட்டால் உங்கள் பிரச்சனைகள் தீரும் என ஏற்கனவே முடிவு செய்து வைத்திருப்பீர்கள். ஓட்டு போடும் நீங்கள் தான் எங்களுக்கு எஜமானர்கள் உங்களுக்கு பணி செய்ய வார்டு உறுப்பினர்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் மகேஸ் பேசினார்.

இந்த நிலையில் திருச்சி மாநகராட்சி 16வது வார்டு தி.மு.க. வேட்பாளர் மதிவாணனை ஆதரித்து அரியமங்கலத்தில் தி.மு.க. ஊழியர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு, தி.மு.க. வேட்பாளர் மதிவாணனை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும் என ஆலோசனை வழங்கினார். இதில் வட்டக் கழக செயலாளர்கள் தங்கவேலு சண்முகம் கார்த்தி ராமலிங்கம் கட்சி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/KNv2yb8cLEr6BuJWcHPLyh

#டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *