Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

டாக்டர் கலைஞர் 102-வது பிறந்தநாள் விழா-பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர்

முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்று இரண்டாவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு துவாக்குடி மாதிரி பள்ளியில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களை உற்சாகப்படுத்திய அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி‌ .   

தன் எழுத்தாலும் பேச்சாலும் தமிழினத்தின் உயர்வுக்கு வழிகாட்டிய அறிவுச்சூரியன் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 102வது பிறந்தநாளை முன்னிட்டு திருவெறும்பூர் – துவாக்குடியில் அமைந்து ள்ள திருச்சி மாவட்ட அரசு மாதிரிப்பள்ளியில் பேச்சுப்போட்டி நடைபெற்றது. 

அதனை நேரில் பார்வையிட்டு, கலைஞர் பற்றி உரையாற்றிய மாணவச் செல்வங்களைப் பாராட்டி, அவர் எழுதிய நூல்களைப் பரிசாக வழங்கினார் இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF

டெலிகிராம் மூலமும் அறிய….

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *