Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அமைச்சர் கே.என்.நேரு பிறந்த நாள் விழா – திருச்சியில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டம்.

திமுக கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேருவின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு இன்று தமிழ்நாட்டு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார். 

அதன் பிறகு சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி திரும்பினார். தனது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அறிஞர் அண்ணா மற்றும் கருணாநிதி திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 

இதனைத் தொடர்ந்து தில்லை நகர் சாஸ்திரி சாலையில் உள்ள அவரது அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்தித்தார். அப்போது ஏராளமானோர் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைச்சர் கே.என்.நேருக்கு மாலை அணிவித்தும், சால்வை அணிவித்தும், நினைவு பரிசுகள் வழங்கியும் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர். 

அமைச்சரின் பிறந்த நாளை முன்னிட்டு திமுகவினர் திருச்சி மாநகர், புறநகரில் கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகளில் சிறப்பு வழிபாடு நடத்தினர் மேலும் குழந்தைகள் காப்பகம், விழி இளந்தோர் பள்ளி, ஆதரவற்ற இல்லங்களில் குழந்தைகளுக்கு உணவும் வழங்கப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான தொண்டர்கள் பலர் கலந்து கொண்டு அமைச்சர் கே.என் நேருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

இந்த நிகழ்வில் சட்டமன்ற உறுப்பினர்கள், காடு வெட்டி தியாகராஜன், கதிரவன், ஸ்டாலின் குமார், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ,மாநகர செயலாளர மேயர் அன்பழகன், மண்டலக் குழுத் தலைவர்கள், நகர,பகுதி, ஒன்றிய, வட்டக் கழக உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LYWjbKaEy206I5aquHTp81

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *