Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

திருச்சியில் 3.5 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய அமைச்சர்

திருச்சிராப்பள்ளி மாவட்டம் பூவாளூர் பேரூராட்சியில் மூலதன மானிய நிதித்திட்டத்தின் கீழ் ரூபாய் 1.25 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள புதிய பேரூராட்சி அலுவலக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே. என்.நேரு இன்று (16.02.2024) தொடங்கி வைத்தார். 

இதனை தொடர்ந்து திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 2.25 கோடி மதிப்பீட்டில் அலப்பரெட்டியார் பாதை முதல் திருமழபாடி ரோடு வரை இருபுறமும் மூடியுடன் கூடிய மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி திட்டப்பணிகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (16.02.2024) தொடங்கி வைத்தார். 

திருச்சிராப்பள்ளி மாவட்டம் புள்ளம்பாடி பேரூராட்சியில் 15ஆவது நிதி குழு மானிய திட்டத்தின் கீழ் ரூபாய் 50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய பொது சுகாதார நகர்நல மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (16.02.2024) திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மா. பிரதீப் குமார், லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரபாண்டியன், ஒன்றிய குழு தலைவர் ரவிச்சந்திரன் லால்குடி வருவாய் கோட்டாட்சியர் சிவசுப்பிரமணியன், உதவி இயக்குனர் பேரூராட்சிகள் காளியப்பன், முக்கிய பிரமுகர் வைரமணி உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…

https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a

#டெலிகிராம் மூலமும் அறிய…. 

https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *