Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

12ஆம் வகுப்பு துணை தேர்வு மையத்தில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு

திருச்சி கல்வி மாவட்டத்தில் 8 மையங்களில் 12ஆம் வகுப்பு துணைத்தேர்வு நடைபெறுகிறது. 6.8.2021 இன்று முதல் 19.8.2001 முதல் நடைபெற்று வருகிறது. சுமார் 3000 பேர் இந்த துணைத் தேர்வை எழுதுகின்றனர். திருச்சி சாவித்ரி வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்று வரும் பன்னிரண்டாம் வகுப்பு துணைத்தேர்வை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தார்.

தேர்வு நடைபெறும் பள்ளிக்கு நேரடியாக சென்று  கால அட்டவணை உள்ளிட்டவற்றை பார்வையிட்டு ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

நேரடியாக தேர்வு நடக்கும் வகுப்பறையில் ஆய்வு மேற்கொண்டார். உடன் மாவட்ட கல்வி அதிகாரி பள்ளியின் தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் இருந்தனர்.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….

https://chat.whatsapp.com/GJDm40VrfQc6PgMBZJzYBf

டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *