Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருவெறும்பூர் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் திடீர் ஆய்வு செய்த பள்ளிக்கல்வித் துறை அமைச்சர்

திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட நடராஜபுரத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்ப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு மேற்கொண்டார். பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தும், தேவைப்படும் மேம்பாட்டு வசதிகள் குறித்தும் தலைமை ஆசிரியரிடம் கேட்டறிந்தார்.

மேலும் வகுப்பறைகளுக்கு சென்று மாணவர்களை சந்தித்து அவர்களிடம் கலந்துரையாடினார். மாணவர்களிடம் மாணவர்களைப் போல தன்னையும் மாற்றிக் கொண்டு அவர்களுடன் இருக்கையில் சமமாக அமர்ந்து திருக்குறளை சொல்லும்படி கேட்டார்.

எந்தவொரு முன்னறிவிப்புமின்றி தொகுதியில் பல்வேறு மக்கள் நலப்பணிகளில் துவக்க விழாவில் கலந்து கொண்ட போது திடீரென ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.

#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EBWOGQoz6UK760TTm5WwQK

#டெலிகிராம் மூலமும் அறிய… https://t.co/nepIqeLanO

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *