Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

BS V1 புதிய பேருந்துகளை பயன்பாட்டிற்கு அர்பணித்த அமைச்சர்கள்

திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கும்பகோணம் கோட்டம் திருச்சி மண்டலத்தின் மூலம் BS V1 புதிய 15 பேருந்துகளை நகராட்சி நிருவாகத்துறை அமைச்சர் கே.என். நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மண்டலம் மூன்றின் தலைவர் மதிவாணன் மாநகராட்சி ஆணையர் சரவணன், கும்பகோணம் கோட்ட மேலாண் இயக்குனர் மகேந்திர குமார், திருச்சி மண்டல பொது மேலாளர் முத்துகிருஷ்ணன், பொது மேலாளர் சிவசங்திரன் (கரூர்) துணை மேலாளர் ரங்கராஜன்(மனிதவள மேம்பாடு, கூட்டான்மை) துணை மேலாளர்கள் (தொழில்நுட்பம்) கார்த்திகேயன், புகழேந்தி (வணிகம்)

போக்குவரத்து கழக பணியாளர்கள் , கோட்ட மேலாளர்கள் ஜேசுராஜ் ( புறநகர் ) சுரேஷ் பார்த்திபன் (நகரம்) கோட்டை மேலாளர் (பெரம்பலூர் ) ராமநாதன், மண்டலக்குழு தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அலுவலக பணியாளர் அலுவலக பணியாளர்கள், அனைத்து தொழிற்சங்க பிரதிநிதிகள், அனைத்து போக்குவரத்து கழக தொழிலாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Cs9s0CdOqXmGS1SrcL2f9I

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *