திருச்சி மாநகரில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் கலைஞர் பெயரில் அமைக்கப்படும்” என்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் அறிவித்திருந்தார்.
இதனை தொடர்ந்து திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் உள்ள நுகர்வோர் வாணிப கிடங்கு அருகில் உலகத் தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைய உள்ளது. கலைஞர் பெயரால் புதிதாக கட்டப்பட உள்ள நூலகத்திற்கான இடத்தை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். அமைச்சர்கள் நேரு, மகேஸ், ஆட்சியர் பிரதீப் குமார் உடனிருந்தார்கள்.
இந்நிகழ்வில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மற்றும் மண்டலம் 3ன் தலைவர் மதிவாணன், திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், பொது நூலக இயக்குநர் இளம்பகவத் பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, நூலகத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Bc1J0GoecHn2ft2JsWCgfU
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments