திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து காரைக்குடிக்கு பயணிகள் ரயில் 4:45 மணிக்கு புறப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு 200-க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு டிக்கெட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.
தற்போது வரை பயணிகள் ரயில் புறப்படாததால் பயணம் செய்ய காத்திருந்த பயணிகள் மறிலில் ஈடுபட முயற்சி ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் தற்பொழுது வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் தண்டவாள பணிகள் நடைபெறுவதால் இஞ்சின் மாற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை அந்த பயணிகள் ரயில் புறப்படவே இல்லை. இன்ஜினுடன் ரயில் பெட்டிகள் தண்டவாளத்தில் நிற்கிறது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/GgA8w690Wqd7IwIEsO6ZZ5
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments