Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

மாநகர ஆயுதப்படை மைதானத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட யோகாசன நிகழ்ச்சி

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் தோன்றிய உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வு அளிக்கும் யோகக் கலையை உலகம் முழுவதும் பிரபலப்படுத்தியதுடன், பிரதமர் மோடி அறிவிக்கப்பட்டு உலக நாடுகள் ஒருமித்த ஆதரவுடன் 2015 ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

சர்வதேச யோகா தினத்தையொட்டி திருச்சி மாநகர காவல் துறை மற்றும் அரசு இயற்கை மற்றும் யோகா மருத்துவர்கள் இணைந்து திருச்சி கேகே நகர் ஆயுதப்படை மைதானத்தில் யோகாசன நிகழ்ச்சி நடைபெற்றது. 

திருச்சி மாநகர காவல் ஆணையர் சத்திய பிரியா, திருச்சி மண்டல சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் பங்கேற்று அறிவுரைகள் வழங்கினர்.

உடலுக்கும், உள்ளத்திற்கும், சப்த நாடிகளுக்கும் பலன் தரும் வகையில் பல்வேறு ஆசனங்களை சொல்லிக் கொடுக்க 500க்கும் மேற்பட்ட காவல் ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் பங்கேற்று ஆசனங்கள், மூச்சுப் பயிற்சி போன்றவற்றை செய்து மகிழ்ந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *